Monday, 20 May 2013

வாழ்க வளமுடன்



டங்! டங்! டங்

"அண்ணா!" என்று யாரோ உரக்கக் கத்தியதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் கேத்தரின். இரும்புத் தாழ்ப்பாளை அதே இரும்பைக் கொண்டு செய்யப்பட்ட கேட்டுடன் சேர்த்து அடித்ததன் விளைவு தான் அந்த "டங்! டங்!"

வெடுக்கென்று எழுந்து சமையலறையில் ஒரு ஓரத்தில் பாவமாய் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியினை எடுத்து வெளியே வந்தாள்.  

கேத்தரின் ஒரு மிகவும் தனித்தன்மை வாய்ந்த பெண். பொதுவாக தத்துவார்த்தமாக சிந்திப்பவர்கள் மதத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும் Nietzsche, Osho போன்றவர்களின் எழுத்தை அதீதமான சிரத்தையுடன் படித்த பின்பும் கடவுள் நம்பிக்கையோடு இருப்பதென்பது முடியாத காரியமே. ஆனால் கேத்தரின் ஒரு விளக்கமுடியாத விதிவிலக்கு

Nietzsche-வின் "God is dead " என்ற சொற்களைப் படித்த அதே உதடுகள் தான் "Our father in heaven" என்ற கிறித்துவ பிரார்த்தனையையும் தினமும் சொல்லக் கூடியவை.

"The existence and non-existence of God depends on your definition of the term," என்று எங்கோ படித்ததை அவ்வப்போது நினைவு கூர்ந்துகொண்டிருப்பாள். 

இவ்வாறாக "விளங்கமுடியா கவிதை"யாகத் திகழ்ந்த கேத்தரினுக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றிற்று. "பிறர் பாவங்களுக்காக தன்னையே வருத்திக் கொண்டவர் இயேசு கிறிஸ்து. வீடு சுத்தமாக இருக்க பலர் போடும் பல விதமான குப்பைகளை தன்னுள் அடக்கிக்கொள்ளக் கூடியது குப்பை தொட்டி. அப்படியென்றால் குப்பைத்தொட்டியும் ஒரு விதத்தில் கிறிஸ்து போன்றது தானோ? அதை ஏன் நாம் இழிவாகப் பார்க்கிறோம்?" என்று நினைத்துக் கொண்டாள்.

இதைத் தன் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்ள மாட்டார்கள். "கண்ட கண்ட புக்ஸ் படிச்சு தான் உனக்கு இந்த மாதிரி கீழ்த்தனமா யோசிக்கத் தோணுது. இரு, ஒரு நாள் அந்த புக்ஸையெல்லாம் கிழிச்சு குப்பை தொட்டில போட்டுடறேன். அப்போ தான் உனக்கு புத்தி வரும்." என்று அம்மா கூறுவதைக் கற்பனை செய்து கொண்டு, இது போன்ற கருத்துகளைப் பகிர ட்விட்டர் தான் சரியான இடம் என்று தனது "mind voice" சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் கேட்டது அந்த "டங்! டங்!"

திடீரென்று சுயநினைவுக்கு வந்தவள் போல் கேத்தரின் தெளிவாகி குப்பை அள்ள வருபவரிடம் அந்த பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியினை ஒப்படைத்தாள். சரியாக அதே நேரத்தில் தான் முன்னதாகக் குறிப்பிடப்பட்ட "அண்ணா"வும் மாடியிலிருந்து கீழே வந்தார்.

"அண்ணா" என்பது அந்த வீட்டின் உரிமையாளர். தான் பிறந்து வளர்ந்த சேலத்திலேயே கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தாள் கேத்தரின். பெங்களூருக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால் PG-க்களில் தங்குவதை நிறுத்தி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள் அவளும் அவளது சக ஊழியை மற்றும் தோழியுமான கரீஷ்மா சட்டர்ஜி. பெயரைப் பார்த்தே யூகித்திருப்பீர்கள் கரீஷ்மா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் என்று. இருவரும் தமது குடும்பத்தை விடுத்து, சொந்த ஊரை விடுத்து வேறொரு ஊரில் தங்கியிருந்ததால் வாழ்க்கையில் பற்பல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள்.

ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்துக் கொண்டிருந்த அவர்கள் ஒரே வீட்டில் வாழவும் முடிவு செய்து ஜெயா நகரில் ஒரு "2BHK" வீட்டினை வாடகைக்கு எடுத்தனர்.

அவ்வீட்டின் உரிமையாளர் 'அண்ணா' தன் வீட்டுக் குப்பையை எடுத்து வெளியே வந்தார். வந்தவரைப் பார்த்து கேத்தரின் "குட் மார்னிங், சார்!" என்று கூறிப் புன்னகைத்தாள். அவரும் பதிலுக்கு காலை வணக்கங்கள் தெரிவித்து புன்னகைத்து விட்டுச் சென்றார்

உள்ளே வந்த கேத்தரின் அரை மணி நேரத்தில் தயாராகி முடிக்கையில் மணி 8.20 ஆகி இருந்தது. இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த தனது தோழியிடம், "கரீஷ்மா, இட்ஸ் ஆல்ரெடி எய்ட் ட்வென்டி," என்று கூறினாள். ஒரு அரை நிமிடம் அப்படி இப்படிப் புரண்டு கடைசியில் எழுந்த கரீஷ்மா அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகத் தன் பங்கிற்கு ஒரு அரை மணி நேரம் எடுத்துக் கொண்டாள்.

ஒருவாராக இருவரும் ஒன்பது மணிக்கு சரியாக வீட்டைப் பூட்டிக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டனர்

வாழ்க்கையில் எப்பொழுதும் "ஃப்ரீ பர்ட்"-ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை கரீஷ்மாவுக்கு அதிகம். அதற்கு மாறாக தத்துவம் கித்துவம் என்றெல்லாம் யோசிக்கும் கேத்தரினுக்கோ வாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகத் தெரிந்தது. தமது சிந்தனைகளில் இப்படிப்பட்ட அடிப்படைக் கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் மிகுந்த ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவர்கள்

என்ன, கரீஷ்மா எப்போதும் தனது "Scooty Pep"- மின்னல் வேகத்தில் செலுத்தக் கூடியவளாதலால் சற்றே பயப்படக் கூடிய கேத்தரின் "Hail Mary" என்ற இன்னொரு பிரார்த்தனையையும் தினமும் கூறுவதைப் பழக்கமாக்கிக்கொண்டு விட்டாள்

வண்டியில் அலுவலகத்திற்குச் செல்லுகையில், கேத்தரின் ஏதோ ஒன்றை மிகவும் சிரத்தையாக முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கரீஷ்மாவும் சில முறை வண்டியின் பின் காட்டிக் கண்ணாடியில் (rear view mirror) பார்த்திருக்கிறாள். அதை கவனித்து மெலிதாகப் புன்னகைத்து இடது வலதாக தலையை ஒரு முறை அசைத்து விட்டு சென்று கொண்டேயிருப்பாள்

இத்தனைக்கும் கரீஷ்மாவின் வண்டியோட்டும் பாணியைப் பற்றி அவளிடம் கூறாமல் இல்லை கேத்தரின். "யூ ஆர் ரியலி குட் ரைடர். பட் வெரி ஓவர் கான்ஃபிடண்ட் அட் சேம் டைம்," என்று ஒரு நாள் வெளிப்படையாகவே கூறிவிட்டாள். அவள் பதிலுக்கு, "இட்ஸ் ஆல்ரைட் யா. டோன்ட் பீ ஸோ ஸ்கேர்ட். நோ டு கன்ட்ரோல் மை ஸ்கூட்டர். சில்," என்றாள். சரி, இவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறாளேயென்று கேத்தரினும் அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை அன்றிலிருந்து

ஆனால் சோதனை என்பது வரும் முன் கடிதம் மூலம் தெரிவித்து விட்டா வரும்? அது சூப்பர் ஸ்டாரைப் போன்றது. எப்பொழுது வரும்? எப்படி வரும்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்து ஒரு சூறாவளியையே கிளப்பி விட்டுச் சென்றுவிடும்

அன்று அவ்வாறு தான்

கோரமங்களாவில் இருக்கும் அலுவலகத்திற்கு டெய்ரி சர்க்கில் வழியாகச் செல்வார்கள் இருவரும். டெய்ரி சர்க்கில் பாலத்தை இதுவரை யாரும் மெதுவாகக் கடந்ததாக சரித்திரமே கிடையாது. வெளியூர் பேருந்தாக இருந்தாலும் சரி, தனி நபரின் வாகனமாக இருந்தாலும் சரி, அந்த பாலத்தை 70கி.மீ வேகத்தில் தான் கடக்கும். கரீஷ்மா மட்டும் விதிவிலக்கா என்ன?

பொதுவாக வேகமாகச் சென்றாலும் பாலத்தை இறங்குகையில் சற்று சீர்படுத்திக் கொள்ளக்கூடியவள் கரீஷ்மா. எப்பொழுதும் வண்டியை ஓட்டக் கூடிய விதத்தில் அன்று ஓட்டினாலும், பாலம் முடியுமிடத்தில் முன்னமிரவு பெய்த மழையால் உண்டான ஓட்டையை அடைக்கும் பணி நடந்து அங்கே ஒரு பெரிய பாறையை வைத்திருப்பதைக் கடைசி நொடியில் தான் கவனித்தாள்

என்ன 'sudden brake' அடித்தும் எந்த பயனும் இல்லை. அந்த பாறையில் வண்டி வேகமாக மோதி இருவரும் ஒரு பத்தடி பறந்து விழுந்தனர்.

தலைக்கவசம் அணிந்திருந்ததால் கரீஷ்மாவுக்குக் காயம் அதிகமாக ஏற்படவில்லை. துரதிர்ஷ்டம் என்பது பெரும்பாலும் 'பில்லியன் ரைடரைத்' தான் தாக்கக் கூடியது.

கரீஷ்மாவையும் தாண்டி பறந்து விழுந்த கேத்தரின் வலதுபுறத்தில் இருந்த சாலை மீடியனில் தலை வேகமாக மோத, அதிக அளவில் இரத்தம் இழக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் அப்படியே நின்று போக, டெய்ரி சர்க்கில் பாலத்திலிருந்து நிம்ஹான்ஸ் மருத்துவமனை வரை போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. பாறையுடன் மோதிய வண்டியோ பெரிய அளவு அடி ஏதும் வாங்காமல் சாலையின் இடது புறத்தில் படுத்துக்கிடந்தது. பெருமளவு சேதம் அடையாமல் இருக்குமளவிற்கு ஒரு இயந்தரத்தைப் படைக்கும் ஆற்றலை மனிதனுக்கு அளித்த இயற்கை அன்னை, அதே அளவு வலிமையை அம்மனிதனுக்கு அளிக்காமல் இருப்பதே ஒரு விந்தையான விஷயம் தான்.

இதைப் பற்றி எல்லாம் அறியாத, அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத கரீஷ்மா மெதுவாக தனது உடல் வலிமையை ஒருங்கிணைத்துத் தனது தமிழ்தோழியை நோக்கித் தவழ்ந்து வந்தாள். சுயநினைவை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்த கேத்தரின் கரீஷ்மாவின் மங்கலான உருவை மட்டும் கண்டாள். அவளைக் கண்டதும் கேத்தரின் வலியுடன் கலந்த ஒரு மெல்லிய புன்னகையை அளித்தாள். அந்த புன்னகை "நான் அப்போவே சொன்னேன் இல்ல?" என்று கேட்பது போல் இருந்தது

கரீஷ்மா ''வென்று சத்தமாக அழ ஆரம்பித்த அதே நேரத்தில் சுற்றியிருந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்சை அழைத்தார், மற்றொருவர் அடிப்படை முதலுதவி செய்யத் தொடங்கினார்

கீழே வலியில் துடித்து நகர முடியாமல் படுத்துக் கொண்டிருந்த கேத்தரின் வலதுபுறத்திலிருந்த ஒரு வண்டியின் மேல் இருந்த வாசகத்தைக் கண்டாள்

"வாழ்க வளமுடன்."

அவள் கண்கள் மூடிக் கொண்டன.

Monday, 12 November 2012

First World Problems


What have you lost?
A few hours of sleep,
thinking of the "betrayals"
you faced
and deceptive words sugar-laced.
Tear-soaked pillows
give you company.
You still have a roof above you.
What is left with us
when our cradles
have turned into graveyards,
and our playgrounds into battlefields?

Your gaming consoles keep you happy.
You enjoy sniping enemies
made of 0s and 1s.
Our guns are real.
So are our grenades.
Our enemies are made of flesh and bones.
Not a game, to "respawn in 20 seconds".
What will console us?

Grandpa tried. Papa died
in an assassination that meant his suicide.
Motherland spread across far and wide,
yet we need to hide,
and kill our pride.

A handful of rice
is an asset,
a bowl of it
is a luxury.

A rag is
our jacket,
a shirt intact
is a "dress".

Our battles are real.
We are weak.
We are the meek.
We haven't got what we seek.

You're at a better place
that hasn't seen invasion of space.
Yet you continue to amaze (us)
with the "hardships" you face.

Yes, life is not a bed of red roses.
Ours is ridden with just thorns.

Friday, 19 October 2012

Method in Madness


A slither, a slide,
a flutter, a glide.
A hop, a leap,
a focus, a peep.
A swim, a crawl,
a hiss, a bawl.
A bite, a sting,
a pounce, a spring.
A creep, a sprint,
a stare, a squint.
A fur, a scale.
A male-turned-female.
A trunk, a snout,
a beak, a mouth.
A woof, a caw,
a talon, a paw.
A wing, a fang,
a shark, a tang.
A stripe, a spot,
a few, a lot.

Random - there's no such thing.
A method is in what they sing.
The vast variety in nature -
paints God's own caricature.
Brims with ferocity yet full of love.
Man, the animal, is never above.

Thursday, 27 September 2012

Downfall


The bar of soap,
unable to withstand
bodily grossness
and seeing impurities
up close,
decides to escape.
It slips,
bounces,
flies,
leaps up in the air,
and falls,
only to find
itself
plummeting into the sewer.




Monday, 17 September 2012

"There's No God"



So minuscule - the eyes can't see it.
The key to life lies within.
Not all visitors does it inside permit.
Though holy, labelled the original sin.

What happens next - again unseen.
The growth is mad. Old clothes can't be worn.
Welcomed by people happy and keen,
Nine months later, a new life is born.

So minuscule - the eyes can't see it.
From it, journeys of death begin.
Rarely people survive after being hit.
Millions lose, only a thousand win.

It cares not if it's an old man or teen.
Spreads gloom in hearts, and hides the dawn.
No matter how strong one has been,
When the time arrives, what's gone is gone.

The invisible becomes visible.
The visible becomes invisible.
These mysteries mind can comprehend not.
The invincible becomes vincible.
The vincible becomes invincible.
For, the Universe itself grew from a tiny dot.

Marvels I see,
of miracles I hear.
The heart feels glee
as well as fear.

I ask you queries.
You negatively nod.
And it really worries (me)
when you say, "There's no God".

Tuesday, 4 September 2012

கலை செய்த உதவி


அப்பொழுது வருடம் 2003. நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் வயதை ஒத்தவர்களுக்கும், என்னை விட வயதில் பெரியவர்களுக்கும் இந்த "தக்ஷின் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா" என்பது கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அவர்கள் நடத்தும் 8 தேர்வுகளை முடித்தாலே போதும்; "ஹிந்தி பண்டிட்" ஆகிவிடலாம். அது மட்டுமல்லாமல், தேர்வு நடைபெறும் அறைகளுக்குள் நூலுரையை எடுத்து வரலாம். அருகில் இருப்பவரைப் பார்த்து "காப்பி" அடிக்கலாம். சுருக்கமாக, இப்படிப்பட்ட பல நாதாரித்தனங்களை அறையில் இருக்கும் தேர்வு அதிகாரியின் உதவியுடனேயே அரங்கேற்றலாம். எனக்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த 8 தேர்வுகளில்  3-ஆவதான "ராஷ்ட்ரபாஷா" எழுதும்போது, எனக்கு அருகில் அமர்ந்திருந்த சகமாணவி ஒருத்தி தனது உடையிலிருந்து எங்கிருந்தோ ஒரு பாதி நூலுரையை எடுத்து மேஜை மீது வைத்து அதைப் பார்த்து எழுத ஆரம்பித்தாள். இப்படி மக்களுக்கு பல குறுக்கு வழிகள் இருப்பதால் அந்த இயக்கம் இன்றும் வலுவாக ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

அந்த காலகட்டத்தில் நான் ஒரு 'ஆனஸ்ட்'  ராஜ்-ஆக இருந்ததும். அதன் காரணமாக மேலே குறிப்பிட்டுள்ள நாதாரித்தனங்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்ததும். அதன் காரணமாக நான் எழுதிய 5 தேர்வுகளில்  4- இல் "செகண்ட் கிளாஸ்"-இல் (அதுவும் 40, 50 மதிப்பெண்கள் தாண்டாமல்) தேர்ச்சி பெற்றதும் வேறு கதை. 

நான் இங்கே கூற இருப்பது அந்த ஹிந்தி தேர்வுகளுக்கு நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் நான் சந்தித்த நபர், மற்றும் அவருடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மறைமுகமான உறவைப் பற்றியதாகும். 

அந்த ஹிந்தி ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்த வயதான பெண்மணியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. 'கமலா'-வாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கதை கூறும் சௌகரியத்துக்காக அவ்வாறே வைத்துக் கொள்வோம். அவருடைய முதன்மையான மாணவியாகத் திகழ்ந்தவரின் பெயர் கலையரசி. அவரை நாங்கள் அனைவரும் "கலை அக்கா, கலை அக்கா" என்று அழைப்போம். சில பேர், அவரை கடுப்பேற்றுவதற்காகவே "கலையரிசி" என்றும் அழைத்து வந்தனர். நானும் ஓரிரு முறை அவ்வாறு அழைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

கலை அக்கா மிகவும் நல்லவர். பாடத்தில் எங்களுக்கு எந்த வித சந்தேகம் இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார். கமலா டீச்சர் வீட்டில் இல்லாத பொழுதோ, ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போதோ மாணவர்களுக்கு பாடங்களை சென்றடையச் செய்வது கலை அக்காவின் பொறுப்பேயாகும். அவர் பாடம் எடுக்காத நேரங்களில் சினிமா பற்றி பேசுவார். ரேடியோ கேட்பதும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். சூரியன் FM-இல் முந்தைய நாள் என்ன சொன்னார்கள், "ஹலோ சென்னை"யில் சுசித்ரா எதைப் பற்றி பேசினார் என்று எல்லாமே அவருக்கு அத்துப்படி. மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருப்பார் அவற்றைப் பற்றி.

அந்த வருடம் தான் "காக்க காக்க" திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரேடியோ-வைப் பற்றி கேட்கவே வேண்டாம். மணிக்கொரு முறை அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இருந்தனர். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. "உயிரின் உயிரே" பாடலின் தொடக்கத்தில் வரும் "omahazeeya waahiyaara" பகுதி காதலைப் பற்றிய ஏதோ ஜப்பானிய கவிதை என்று ரேடியோ-வில் கேட்டதை அவர் எங்களிடம் ஒரு நாள் கூறினார். நாங்களும் அதை நம்பிவிட்டோம். அப்பொழுது ஹாரிஸ் ஜெயராஜ் திரைத்துறைக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களே ஆகியிருந்ததால் அவருடைய பாடல்கள் அனைவரையும் கவரும் விதமாக இருந்தன. நானே அப்பொழுது ஹாரிஸ் அமைத்த இசையின் பிரியனாக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தானே தெரிகிறது அவர் ஒரு அரைத்த மாவையே அயராமல் அரைக்கும் கிரைண்டர் என்று. சரி, அவரைப் பற்றிய பேச்சு ஒருபுறம் இருக்கட்டும். அது ஒரு சொல்லி மாளாத சோகக் கதை.

இப்படி, ஹாரிஸ் ஜெயராஜ் பாடலில் பொருளே இல்லாத உளறலைக் கவிதை என்று எண்ணும் அளவுக்கு சூது வாது தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருந்தார் கலை அக்கா. அவர் நிஜமாகவே மிகவும் நல்ல பெண். அதை மறுக்கவே முடியாது. 

இப்படித்தான் ட்யூஷன் எல்லாம் முடிந்து தேர்வு நாளன்று மாணவர்கள் அனைவரையும் கலை அக்கா தன்னோடு அழைத்துச் செல்வார். அவரும் அப்பொழுது கடைசி இரண்டு தேர்வுகளுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததால், அவரும் எங்களுடன் சேர்ந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் மத்தியில் நாங்கள் தேர்வு முடித்து வந்ததும் எங்களிடம் அக்கறையாகக் கேட்பார் தேர்வை எப்படி எழுதினோம் என்று. 

ஒரு முறை, தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்ப போதுமான அளவு காசு இல்லாததால் அவரிடம் ஒரு இருபது ரூபாய் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது பசியாகவும் இருந்ததால் ஒரு பத்து ரூபாய் கூடுதலாகி முப்பது ரூபாய் கடன் வாங்கி விட்டேன். அதன் பிறகு பள்ளித் தேர்வுகள் வந்ததால் இந்த ஹிந்தி ட்யூஷன் நின்றுவிட்டது. ஆனால் அவர் தனது வீட்டுக்கு வரும் வழியை தெளிவாக என்னிடம் கூறினார். "போரூர் வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்த தாண்டி ரைட்ல ஒரு சந்து வரும். அதுல நேரா வந்தா செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் இருக்கு. அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தேன்னா பச்ச கலர் கேட் வெச்சு ஒரு வீடு இருக்கும். அது தான். மறக்காம வந்து குடுத்துடு." அவர் கூறிய வார்த்தைகள் என் காதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. 

நானும் பிறகு கொடுக்கலாம், பிறகு கொடுக்கலாம் என்றெண்ணி காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். 

அடுத்த ஹிந்தி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கும் நேரமும் வந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக கமலா டீச்சரின் கணவர் இறந்துவிட்டார். இப்படியிருந்த நிலையில் அவரது வீடும் சில கயவர்களால் சூறையாடப்பட்டு விட்டது. இப்படி சங்கடத்தின் மேல் சங்கடம் வந்து வாட்டியதில் கமலா டீச்சர் என்ன செய்வதென்றே புரியாமல் ட்யூஷனை நிறுத்தி விட்டார். நானும் சற்று கனத்த இதயத்தோடு வேறொரு ஆசிரியரிடம் பயிற்சி பெறச் சென்றேன். 

இதற்கிடையில், நான் கலை அக்காவிடம் வாங்கிய கடனை சுத்தமாக மறந்தே பொய் விட்டேன். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி விட்டன. அதுவும் ஒன்பது வருடங்கள்!

எனக்குப் பொதுவாகவே காசு கடன் வாங்குவது பிடிக்காது. என் அம்மா எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்பார், "யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் அதை சரியான நேரத்தில் திருப்பியளித்துவிட வேண்டும்". என் தாயாரின் இந்த கொள்கை எனக்கும் என் அக்காவுக்கும் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது. கடன் வாங்கினால் அதைத் திருப்பி தரும் வரை மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். 

நான் சுயமாக சம்பாதிக்க தொடங்கிய பின்னர் சில முறை சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தினால் கடன் வாங்கி இருக்கிறேன். அவற்றை சரியான நேரத்தில் திருப்பியும் கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள் என்னிடம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். "அப்புறம் தரேன், அப்புறம் தரேன்" என்று கூறி ஒரு முழு வருடம் ஆகியும் திருப்பிக் கொடுக்காமலும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டுமல்லவா?

இத்தனை வருடங்கள் ஆன பின்பும், இன்றும் கலை அக்காவிடம் வாங்கிய காசை நான் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது நான் அந்த "பச்ச கேட்"-ஐத் தேடி சென்றாலும் நான் வாங்கிய காசை திருப்பி தர முடியுமா என்று தெரியாது. கலை அக்காவுக்கு கண்டிப்பாக திருமணமாகியிருக்கும். அவர் தாய்-தந்தை இன்னும் அதே வீட்டில் தான் இருக்கின்றனர் என்பதற்கு உத்தரவாதமும் கிடையாது. 

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அப்படிப் பட்டவை. நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் யாரவது ஒருவருக்குக் கடன் பட்டுள்ளோம். சில சமயங்களில் பல பேருக்கு பல விதங்களில் கடன் பட்டுள்ளோம். நாம் பெற்ற கடன் அனைத்தையும் கண்டிப்பாக தீர்த்து விடுவோமா என்பது சந்தேகமே. ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். அவர்கள் செய்த கடனை மறக்காமல் என்றும் நன்றியுணர்வோடு இருக்கலாம். சில சமயங்களில் நம்மால் முடிந்தது அவ்வளவே.